Vaarppu logo
பரிசோதனை முயற்சியில் விடப்பட்டுள்ளது 
  இதழ் :: வைகாசி 08 [ வார இதழ் ]
இன்றுவரை :: 299 கவிஞர்கள் , 1313 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
தண்ணீர்....red point
நாற்காலிred point
சாதி வெறி, நிறவெறிred point
உலக பெண்கள் தினம்red point
சுஜாதா - நினைவில் நின்றவைred point
என் தாய்மொழிred point
காதலர் தினம்red point
மனித உரிமைred point
பொங்கலோ பொங்கல் - பாப்பா பாட்டுred point
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
குடை
 
நாம் சண்டையிட்டு 
பிரிந்த அந்த
கடற்கறை சந்திப்பின்
அடையாளச்சின்னம்

இன்னமும்
அங்கேயே வானம்பார்த்து
வரமொன்று கேட்டு 
தவம் செய்கின்றது.

மனசை நகங்களில்
வைத்திருக்கும் தேவதையே
உன் கைசேர!

என்னைபோலவே!! 

- தொட்டராயசுவாமி.அ, 
கோவை. 
 
குடை
======

வெயில், மழை என
எந்த நேரத்திலும்
குடையாகிறது
ஏழைத்தாயின் சேலை.

- யாழி, கோவை, தமிழ்நாடு. 
 
குடை
======

மறந்தார்கள் குடை கொண்டுவர,
மழைக்காகப் 
பிரார்த்தனை செய்தபோது.

- கிரிஜா மணாளன்
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு. 
 
குடை
=========

கொட்டும் மழையில் நனையாதிருக்க
தலைக்குமேல் விரிக்கும்போதெல்லாம்
கேள்வியில் நனைகிறது
மனசு.
எல்லோரும் ஒரே குடையின்கீழ்
வருவது எப்போது?

- ஆங்கரை பைரவி, திருச்சிராப்பள்ளி
  தமிழ்நாடு. 
 
குடை

குடையின் கீழ் மனிதன்
குடையின் மேல் மழை என்றால் ....

குடையின் உள்ளே பொழியும்
குற்ற உணர்வில் நனையும் போது 
குடை ஒன்று விரியுமா ?

மேகத்தின் சேர்க்கையால்
சோகத்தின் வடிவமாய்
பொழியுமந்த மழையின் போது
பதுங்குகிறோம் குடையின் கீழ்

சொந்தத்தின் சேர்க்கையால்
விளையும் சோகத்துக்கு
குடை எங்கே வாங்குவீர்
உமைத்தானே கேட்கிறேன் ?

நியாயம் என்னும் குடையின் கீழ்
நிம்மதி என்னும் நிழலை
நிறுத்து வாங்கும் சமுதாயம்
நின்று பார்த்தால் பரிதாபம்

தன் குடையை பகிர்ந்தளிக்கும்ம் தரமான மனிதன் ஒரு புறம்..
இரவல் குடையினுள் பகிர்ந்தவனை
இடித்துத் தள்ளித் தனதாக்கிக் கொள்ளும்
பேராசைக்கார மனிதன் மறுபுறம்

வாழ்க்கை இதுதான் தோழனே
வாழ்ந்து பார்த்ததும் ஏனோ
மழை பெய்யும் போது
மனம் குடையைத் தேடவில்லை

சக்தி சக்திதாசன் 
 
குடை.
6-5-08.


இடை குடையோவென
படை கொண்டு வந்து,
குடை விரித்துக் காதலாடி
நடை விரிக்கிறது நானிலத்து வாழ்வுக்கு.

வெப்ப சாமரமிடும்
வெயில், வெகுமானமான
வெகுமாரியிலும் கவிந்து
வெளியேறப் பாதுகாக்கும்.

சின்னக் குழந்தைக்கு
வண்ணமய வடிவில்
என்னமாய் மகிழ
பின்னப்படும் தொழில்நுட்பம்.

நூலில் நடக்க
நிதானம் பலக்க
விதானமாகி
ஏதுவாகும் குடை.

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
1998 - 2008 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by excelgra
யாதும் ஊரே யாவரும் கேளிர்