- சிவப்ரியன் |
|
| பூக்களுக்கும், உனக்கும்..
-------------------------- ரோட்டோரமாய் பல முறை ரோஜாச்செடிகள் வாங்கியதுண்டு. ஆனால், எப்போதும் என் வீட்டு செடிகள் கருத்தரிக்கும் முன்பே மரித்துவிடும்! எப்போதும் சண்டையிடும் உன் கோப விழிகள் எப்போதாவது மன்னிப்பு கேட்கும் நாள் போல, ஒருநாள் அதிகாலை - அது அரிதாய் பூப்படைந்தபோது, அன்று முழுவதும் பண்டிகை தினமானது எனக்கு. ஆம் என் வீட்டு பூக்களுக்கும், உனக்கும் சம்பந்தம் இருக்கிறது! |
|
| வார்ப்பு www.vaarppu.com |
|