Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: ஆவணி 18, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 498 கவிஞர்கள் , 2241 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointபதில்களற்ற மடலாடல்
அவனி அரவிந்தன்
red pointபாசமான பாட்டிக்கு...
வே .பத்மாவதி
red pointதமிழுக்கு அமுதென்று பேர்...!
வை. அண்ணாஸாமி
red pointஎன்னுள்ளே
சுடர்விழி
red pointதூயவள்
வல்வை சுஜேன்
red pointபிச்சைக்காரி.. அவ‌ளின் பிர‌ம்ம‌ன்
ராம்ப்ரசாத், சென்னை
red pointஅழும்வரை சிரிப்பேன்.. காதல் ஏக்கம்
கிரிகாசன்
red pointஇறந்து போவது மேலாகும்
ஈழநிலா, இலங்கை
red pointரமளானே வருகவே...!!!
கவியன்பன் கலாம்
red pointஅரங்கேற்றம்
கணபதி
red pointசில நேரங்களில் சில மனிதர்கள்
லதாமகன்
red pointஎல்லாக கண்களையும் இழந்த
தீபச்செல்வன்
red pointவயது வந்தாலென்ன
நவஜோதி ஜோகரட்னம்
red pointபணம்
வேதா. இலங்காதிலகம்
red pointசும்மா கிடைத்ததல்ல.. பிணமென்றே
வித்யாசாகர்
red pointகாணவில்லை
வேல் கண்ணன்
red pointஅடையாளம்
அபிமன்யு ராஜராஜன்
red pointதேர்தல்!!
இமாம்.கவுஸ் மொய்தீன்
விமர்சனங்கள்
red pointஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
red pointபெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
red pointகாணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2010-05-02 
picture for poem
ஒழுக்கமே உயர்வு தரும்
இரா.இரவி
  இவரின் பிற கவிதைகள்
 
ஒழுக்கமே உயர்வு தரும்
------------------------------

ஒழுக்கமாக வாழும் வாழ்க்கை தவம்
ஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை சவம்

ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை
உலகிற்கு பறைசாற்றியது நமது தமிழகம்

கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம்
கற்பித்தான் முண்டாசுக்கவி பாரதி

ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உயர்த்தினார்
உலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவர்

கல்விக்கு இரண்டாம் இடம் தந்தார்
ஒழுக்கத்திற்கு முதல் இடம் தந்தார் திருவள்ளுவர்

வெள்ளை காகிதத்தில் சிறு கரும்புள்ளி இருந்தால்
கரும்புள்ளி மட்டுமே கண்ணில் படும்

எத்துணை பெருமைகள், திறமைகள் இருந்தாலும்
ஒழுக்கம் இல்லை என்றால் மதிப்பதில்லை யாரும்

நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினம்
கெட்ட பெயரை விரைவாக பெற்றுத்தரும் ஒழுக்கக்கேடு

கண்ணகியும் சீதையும் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால்
கணினியுகத்திலும் போற்றுகின்றோம் அவர்களை

மாதவியும் சூர்ப்பநகையும் ஒழுக்கம் தவறியதால்
மண்ணில் இன்றும் பழிக்கிறார்கள் அவர்களை

இராமன் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால் கடவுள் ஆனான்
இராவணன் ஒழுக்கம் தவறியதால் அரக்கன் ஆனான்

பறவைகள் கூட ஒழுக்கத்தோடு வாழும் போது
பகுத்தறி பெற்ற மனிதன் ஒழுக்கம் தவறலாமா?

விலங்குகள் கூட ஒழுக்கத்தோடு வாழும்போது
விவேகமான மனிதன் ஒழுக்கம் தவறலாமா?

தவறு செய்ய வாய்ப்பு வந்த போதும்
தவறு செய்யாமல் இருப்பவர்களே சிறந்தவர்கள்

ஆறறிவு பெற்ற மனிதனுக்கு இன்று
அவசியம் தேவை நல் ஒழுக்கம்

ஒழுக்கத்தோடு வாழ்பவனுக்குப் பெயர்தான் மனிதன்
ஒழுக்கம் தவறி வாழ்பவன் மனிதனா? சிந்தியுங்கள்

இனிய ஒழுக்கம் தவறி நடப்பன் பெயர்
இரண்டு கால் மிருகம் என்று உணர்

மனம் போன போக்கில் வாழ்வது வாழ்வன்று
மனத்தை கட்டுக்கோப்பில் வைத்து வாழ்வதே வாழ்வாகும்

கணவன் ஒழுக்கத்தோடு வாழ்ந்து வந்தால்தான்
மனைவியிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் உரிமை உண்டு

கணவன் ஒழுக்கம் கெட்டு வாழ்ந்து கொண்டு
மனைவியிடம் மட்டும் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது மூடத்தனம்

ஒழுக்கம் என்து பண்பாடு மட்டும் அன்று
ஒழுக்கம் என்பது உயிர் சார்ந்தது இன்று

நூற்றாண்டுகள் கடந்த பின்னும் நிலைத்தார்
நம் காந்தியடிகள் காரணம் நல்ஒழுக்கம்

கர்மவீரர் காமராசர் பிரம்மச்சாரியாக வாழ்ந்தார்
கல்வி வள்ளல் ஒழுக்கச்சீலராக வாழ்ந்தார்.

ஒருவருக்கு எல்லாம் இருந்தும் உயர்ந்த
ஒழுக்கம் இல்லை என்றால் பயனில்லை

ஒழுக்கம் இருந்து ஏழையாக இருந்தாலும்
உயர்ந்த புகழ் தேடி வந்து சேரும்

எய்ட்ஸ் நோய் கொடிய நோய் உயிர்க்கொல்லி நோய்
ஒருவனுக்கு ஒருத்தி உணர்த்தவந்த உன்னதநோய்

தமிழ்ப்பண்பாட்டை கடைபிடித்து நடந்தால்
தரணியில் எய்ட்ஸை இல்லாமல் ஒழித்திடலாம்

ஒழுக்கம் இல்லாததால் தான் இன்று
உலகம் முழுவதும் பல்கிப் பெருகியது எய்ட்ஸ்

ஒழுக்கம் இல்லாததால் தான் இன்று
மேலை நாடுகளில் வன்முறை வளர்ந்தது

மேலை நாட்டு நாகரீகத்தைக் கடைபிடித்ததால் தான்
நம் நாட்டில் பண்பாடு சிதைந்தது

உலகிற்கே விளக்காகத் திகழ்வது நம்நாடு
பண்பாட்டுச் சீரழிவால் சிதைகின்றது நம்நாடு

அந்நியரிடமுள்ள நல்ல பழக்கம் கடை பிடிப்போம்
அந்நியரிடமுள்ள கெட்ட பழக்கம் விட்டொழிப்போம்

உயிர் மேல் ஆசை இருந்தால்
ஒழுக்கத்தோடு வாழ்வது நல்லது

நீண்ட ஆயுள் வேண்டும் என்றால்
நல்ஒழுக்கம் நாளும் வேண்டும்

உடல்நலனுக்கு ஒழுக்கம் அவசியம்
உள்ளம் நலனுக்கு உடல் நலம் அவசியம்

நல்லவர்களைப் பாடமாகக் கொள்ளுங்கள்
கெட்டவர்களை கவனிக்காமல் விட்டுவிடுங்கள்

ஒழுக்கம் என்பது பால் போன்றது
ஒழுக்கக்கேடு என்பது விசம் போன்றது

ஒருகுடம் பாலில் ஒரு துளி விசம் கலந்தாலும் விசம்
ஒழுக்கமாக வாழ்க்கையில் ஒருநிமிடம் சபலப்பட்டாலும் சஞ்சலம்

இப்படித்தான் வாழவேண்டுமென்பது ஒழுக்கம்
எப்படியும் வாழலாம் என்பது மூடப்பழக்கம்

பகுத்தறிவைப் பயன்படுத்தி வாழ்வது மனித இனம்
பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் வாழ்வது விலங்கினம்

விலங்கை விலங்காக இருக்க வலியுறுத்துவதில்லை
மனிதனை மனிதனாக இருக்க வலியுறுத்துவது ஒழுக்கம்

உலகமே வியக்கும் உயர்ந்த நம்பண்பாடு
ஒழுக்கத்தை போற்றிப் பாதுகாப்பது கண்கூடு

எதை இழந்தாலும் திரும்ப பெற்றுவிடலாம்
ஒழுக்கத்தை இழந்தால் எல்லாம் போய்விடும்

நல்லவர் என்ற பெயரை பெற்றுத்தருவது
நாடு போற்றும் நல்ஒழுக்கம் ஆகும்

கோடிப்பணம் கொட்டிக்கிடந்தாலும்
ஒழுக்கம் இல்லை என்றால் ஏழைதான் அவன்

பணம் எதுவுமின்றி ஏழையாக இருந்தாலும்
ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் அவன் குபேரன்தான்





கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
  Kumari J Jeba   நாடு   India
தளம்
    திகதி   2010-05-10
"அற்புதமான படைப்பு, படைப்பாளருக்கு என் பாராட்டுகள். இன்னும் இது போன்ற அர்த்தமுள்ள கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்"rn-குமரி ஜே ஜெபா
 


 

கருத்துக்கள் (1)



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
1998 - 2009 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்