Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: ஆடி 14, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 496 கவிஞர்கள் , 2223 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointகனவுத் தூதுவன்
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
red pointஎன் உயிர் நீதானே.. அன்பளிப்பு
வரதப்பிரியை
red pointஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகல்
இளங்கோ -கவிதைக்காரன் டைரி
red pointமரணத்தின் வாசல்.. மனசு முழுக்க
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
red pointமழையாக பெய்திடுவோம்
ஈழநிலா, இலங்கை
red pointநழுவுதல்.. உருண்டைச்சோறு
முத்துசாமி பழனியப்பன்
red pointஓற்றைக்கதவும்.. நோர்வே சில தூரம்
கவிதா. நோர்வே
red pointசீதனம்.. வேதனை
கல்முனையான்
red pointகனவென்ன கனவே.. நாளைய பொழுது
ப.மதியழகன்
red pointமுகமூடிகள்
அ. முகம்மது மீரான்
red pointமண் வாசனை
வேதா. இலங்காதிலகம்
red pointபூமியை அழிக்கும் பாதரசம்
வே .பத்மாவதி
red pointஓட்டை பலூன்.. சிட்டு க்குருவி
வி. பிச்சுமணி
red pointஅரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்
red pointஇல்லாத ஒன்று.. இதம் மறந்த.. சீற்றம்
ராமலக்ஷ்மி, பெங்களூர்
red pointமானுட.. மனசுக்குள்.. ஆசை மழை
வல்வை சுஜேன்
red pointதவம்.. பயணம்
மாவை.நா.கஜேந்திரா
red pointமௌன அதிர்வுகள்
நவஜோதி ஜோகரட்னம்
விமர்சனங்கள்
red pointஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
red pointபெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
red pointகாணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள்
picture for poem
காதலே உன்னை என்ன செய்ய
றஞ்சினி
  இவரின் பிற கவிதைகள்
 
பகலா இரவா புரியாத காலநிலை
எப்போதுமின்றி
என்வீட்டு மரங்கள் வெறுப்பை தருகிறது
இதயம் விட்டு விட்டு அடிக்கிறது
என்னை அந்தரத்தில்
தவிக்க வைத்து தாலாட்டு கேட்கிறது

சில மணித்தியால சலனங்கள்
தொ¤ந்தும் ஏன் இப்படி தவிக்கிறது மனம்

ஆசையாய் உன்னை முத்தமிட முடியாது
அன்பாய் உன்னை வருட முடியாது
காதலாய் உன்னை அணைக்கவும் முடியாது
ஆயிரம் தடைகள் சம்பிரதாயங்கள்

அவனுக்கும் இப்படித்தான் இருக்குமா
இருக்க வேண்டுமென்கிறது மனம் ஆசையாக

என் உணர்வுகளே உங்களுக்கு !
மதிக்கத்தான் நினைக்கிறேன் முடிவதில்லை
எப்போதும்
அறிவாக நினைத்தால் சி£¤ப்புத்தான் வருகிறது
அறிவாக நினைக்க மனம் அனுமதிக்கப்
போவதுமில்லை இப்போ.
காதலே ! திரும்பத்திரும்ப உனது அடிமையாக
இன்னும் எத்தனை காலம்தான் நான்..

வயது வரம்புகள்
எப்போ எங்கு யாருடன் என்றெல்லாம்
பார்க்காது
வினோதமான உறவுகளை எப்போதும்
விதைத்த படி நீ.
உதறிவிட்டு போனாலும் தொடர்கிறாய்
என்னுடனே
கொன்றுவிட்டு வாழவும் முடிவதில்லை என்னால்

என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய.


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
  அன்பு   நாடு   India
தளம்
    திகதி   2008-10-25
காதலின் வீரியத்தையும் தமக்குள்ள கட்டுப்பாட்டையும் தெளிவாகவும் காதலோடு
கூறியதில் அருமையே !
 
பெயர்
  ranjchini mai-ndhan   நாடு   India
தளம்
    திகதி   2008-12-25
எழுத்தாளர் அவர்களுக்கு!

காதல் மனம், என்றுமே அறிவின் பேச்சை கேட்பதில்லை தான்...
"அறிவா... ? இல்லை உள்ளத்தின் உணர்வுகளா...?" என்ற விவாதம் வரும் போது, இந்த உள்ளமானது எப்போதுமே வாகை சூடி விடிகிறது.... ஒரே ஒரு விசயத்தில்!
ஆம்! அது காதலின் விசமத்தில்!!. உங்களின் உணர்வு ஆமோதிக்கப்படுகிறது!
உங்களின் கதாபாத்திரம் தவிப்பது போல உண்மையில் ஆண் மனமும், பெண்மையின் மனம் போல கரைந்து தான் போகிறது! இந்த காதலின் ஸ்பரிசங்களில்!! தொடர்ந்து உணர்வுகளை பதிவு செய்யுங்கள்!

- எழுத்துக்களை எதிர்பார்த்து,
- ரஞ்சினிமைந்தன்,
கணக்கம்பாளையம், திருப்பூர்.



 
பெயர்
  றஞ்சினி   நாடு   Germany
தளம்
    திகதி   2009-01-10
அன்புடன் அன்பு ,ரஞ்சினிமைந்தன்.
உங்கள் இருவரின் விமர்சனத்திற்க்கும்
நன்றிகள்..

அன்புடன் றஞ்சினி
 
பெயர்
  Anbinnayagan   நாடு   India
தளம்
    திகதி   2009-07-29
காதலே என்ன செய்ய' ற்ஞ்னியின் கவிதை காதலை வெறுப்பவர்களையும் காதல் மீது காதல் கொள்ள வைக்கும்
- அன்பின் நாயகன்.
 
பெயர்
  Sadasivam   நாடு   India
தளம்
    திகதி   2009-09-19
மிகவும் நல்ல கவிதை
 
பெயர்
  அகணி   நாடு   Canada
தளம்
    திகதி   2010-04-04
உண்மையான வரிகள். உணர்வு நன்றாக சித்தரிக்கப்படுகின்றது. மொத்தத்தில் நல்ல கவிதை. வாழ்க! வளர்க! - அகணி
 
பெயர்
  akila   நாடு   India
தளம்
    திகதி   2010-04-06
எபொழுதும் என்த வயதிலும் என்பது நிதர்சனமான உன்மை
 
பெயர்
  றஞ்சினி   நாடு   Germany
தளம்
    திகதி   2010-05-06
கவிதைகளுக்கு கருத்துச்சொன்ன அனைவருக்கும் அன்பும் நன்றிகளும். ..rnrnஅன்புடன் றஞ்சினி.
 


 
இவருக்கான விமர்சனம்
தமிழில் இவ்வாறான துணிச்சலான காதல் கவிதைகளின் வரவு மிக அரிதாகவே இருக்கின்றது. அறிவுரிமையின் பாசாங்குத்தனம் இல்லை. விடுதலை.... [செ.க.சித்தன்]


கருத்துக்கள் (8)



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
1998 - 2009 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்