Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: ஆவணி 18, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 498 கவிஞர்கள் , 2241 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointபதில்களற்ற மடலாடல்
அவனி அரவிந்தன்
red pointபாசமான பாட்டிக்கு...
வே .பத்மாவதி
red pointதமிழுக்கு அமுதென்று பேர்...!
வை. அண்ணாஸாமி
red pointஎன்னுள்ளே
சுடர்விழி
red pointதூயவள்
வல்வை சுஜேன்
red pointபிச்சைக்காரி.. அவ‌ளின் பிர‌ம்ம‌ன்
ராம்ப்ரசாத், சென்னை
red pointஅழும்வரை சிரிப்பேன்.. காதல் ஏக்கம்
கிரிகாசன்
red pointஇறந்து போவது மேலாகும்
ஈழநிலா, இலங்கை
red pointரமளானே வருகவே...!!!
கவியன்பன் கலாம்
red pointஅரங்கேற்றம்
கணபதி
red pointசில நேரங்களில் சில மனிதர்கள்
லதாமகன்
red pointஎல்லாக கண்களையும் இழந்த
தீபச்செல்வன்
red pointவயது வந்தாலென்ன
நவஜோதி ஜோகரட்னம்
red pointபணம்
வேதா. இலங்காதிலகம்
red pointசும்மா கிடைத்ததல்ல.. பிணமென்றே
வித்யாசாகர்
red pointகாணவில்லை
வேல் கண்ணன்
red pointஅடையாளம்
அபிமன்யு ராஜராஜன்
red pointதேர்தல்!!
இமாம்.கவுஸ் மொய்தீன்
விமர்சனங்கள்
red pointஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
red pointபெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
red pointகாணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள்
picture for poem
அவளும் மல்லிகையும்..
மதியழகன் சுப்பையா
  இவரின் பிற கவிதைகள்
 
வாங்கிச் சென்ற
மல்லிகைப் பூவை
வேண்டாம் என்ற போது

ஏன்? என்று கேட்க வில்லை

வீசி எறிந்து
கோபப்படவில்லை

கசங்காமல் வீட்டிற்கு
எடுத்துச் செல்வது பற்றி
சிந்தித்திருந்தேன்

அடுத்த சந்திப்பின் போதும்
மல்லிகையுடன் வருவேன்.
-------------------------------

*
ஜாக்கெட் ஊக்கை
மாட்டிக் கொண்டிருந்த
உன் கைகள்
உதிர்ந்த மல்லிகைகளை
பொறுக்கிய என் கைகளை
தட்டி விட்டது
காரணம் சொல்லாமல்
அப்படி செய்யக் கூடாது என்று
பாவாடை நாடாவை இறுக்கினாய்
ஆனாலும்
வாசனை மூளையிலும்
மல்லிகை புத்தகத்திலும்
பத்திரமாய் இருக்கிறது.

------------------------------
*
ஒரு முறை
தலை மணக்க
மல்லிகை சுமந்து வந்தாய்
கை கனக்க
மல்லிகை சுமந்து நானும்
இன்னொரு முறை
வெறுங்கூந்தலோடு
வந்திருந்தாய்
கையும் பையும்
வெறுமையாய் நான்.

---------------------------

*
இன்றைக்கு
வேண்டாமென
உதட்டில் பூசிய
என் எச்சிலை துடைத்தாய்
காரணம் கேட்டதற்கு
தலையில் கொத்தாய்
மல்லிகை காட்டினாய்
வீட்டிற்கு தூரமென
என்னையும்
தூரம் வைத்தாய்.

---------------------------
*
உன் மீது
சவாரி செய்ய
நான் வாங்கி வரும்
பயணச் சீட்டுதான்
மல்லிகைச்சரம்
எனக் கிண்டல் செய்வாய்
என் இடுப்பில் அமர்ந்த படி.

-----------------------------
*
கட்டிலெங்கும்
மல்லிகை பரப்பி
மல்லாந்திருந்த உன்
யோனி முகர்ந்து
முத்தமிடுகையில்
மல்லிகைக் காடானது
மனசு.
-----------------------------


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு


 
இவருக்கான விமர்சனம்
பாலியலைக் காதலாக்கி மணம் காணும் கவிஞர் அதையே பெண் கேட்டால் கேள்விக்குறியாக்குவது சமுதாய மரபுவழி எண்ணங்களில் சிக்குண்டு இருப்பதையே உணர்த்துகிறது... [புதியமாதவி, மும்பை]




சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
1998 - 2009 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்