வாங்கிச் சென்ற
மல்லிகைப் பூவை
வேண்டாம் என்ற போது
ஏன்? என்று கேட்க வில்லை
வீசி எறிந்து
கோபப்படவில்லை
கசங்காமல் வீட்டிற்கு
எடுத்துச் செல்வது பற்றி
சிந்தித்திருந்தேன்
அடுத்த சந்திப்பின் போதும்
மல்லிகையுடன் வருவேன்.
-------------------------------
*
ஜாக்கெட் ஊக்கை
மாட்டிக் கொண்டிருந்த
உன் கைகள்
உதிர்ந்த மல்லிகைகளை
பொறுக்கிய என் கைகளை
தட்டி விட்டது
காரணம் சொல்லாமல்
அப்படி செய்யக் கூடாது என்று
பாவாடை நாடாவை இறுக்கினாய்
ஆனாலும்
வாசனை மூளையிலும்
மல்லிகை புத்தகத்திலும்
பத்திரமாய் இருக்கிறது.
------------------------------
*
ஒரு முறை
தலை மணக்க
மல்லிகை சுமந்து வந்தாய்
கை கனக்க
மல்லிகை சுமந்து நானும்
இன்னொரு முறை
வெறுங்கூந்தலோடு
வந்திருந்தாய்
கையும் பையும்
வெறுமையாய் நான்.
---------------------------
*
இன்றைக்கு
வேண்டாமென
உதட்டில் பூசிய
என் எச்சிலை துடைத்தாய்
காரணம் கேட்டதற்கு
தலையில் கொத்தாய்
மல்லிகை காட்டினாய்
வீட்டிற்கு தூரமென
என்னையும்
தூரம் வைத்தாய்.
---------------------------
*
உன் மீது
சவாரி செய்ய
நான் வாங்கி வரும்
பயணச் சீட்டுதான்
மல்லிகைச்சரம்
எனக் கிண்டல் செய்வாய்
என் இடுப்பில் அமர்ந்த படி.
-----------------------------
*
கட்டிலெங்கும்
மல்லிகை பரப்பி
மல்லாந்திருந்த உன்
யோனி முகர்ந்து
முத்தமிடுகையில்
மல்லிகைக் காடானது
மனசு.
-----------------------------
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
|
|
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
|