Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: ஆவணி 18, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 498 கவிஞர்கள் , 2241 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointபதில்களற்ற மடலாடல்
அவனி அரவிந்தன்
red pointபாசமான பாட்டிக்கு...
வே .பத்மாவதி
red pointதமிழுக்கு அமுதென்று பேர்...!
வை. அண்ணாஸாமி
red pointஎன்னுள்ளே
சுடர்விழி
red pointதூயவள்
வல்வை சுஜேன்
red pointபிச்சைக்காரி.. அவ‌ளின் பிர‌ம்ம‌ன்
ராம்ப்ரசாத், சென்னை
red pointஅழும்வரை சிரிப்பேன்.. காதல் ஏக்கம்
கிரிகாசன்
red pointஇறந்து போவது மேலாகும்
ஈழநிலா, இலங்கை
red pointரமளானே வருகவே...!!!
கவியன்பன் கலாம்
red pointஅரங்கேற்றம்
கணபதி
red pointசில நேரங்களில் சில மனிதர்கள்
லதாமகன்
red pointஎல்லாக கண்களையும் இழந்த
தீபச்செல்வன்
red pointவயது வந்தாலென்ன
நவஜோதி ஜோகரட்னம்
red pointபணம்
வேதா. இலங்காதிலகம்
red pointசும்மா கிடைத்ததல்ல.. பிணமென்றே
வித்யாசாகர்
red pointகாணவில்லை
வேல் கண்ணன்
red pointஅடையாளம்
அபிமன்யு ராஜராஜன்
red pointதேர்தல்!!
இமாம்.கவுஸ் மொய்தீன்
விமர்சனங்கள்
red pointஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
red pointபெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
red pointகாணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2008-03-16 
picture for poem
பாண்டித்துரை குறுங்கவிதைகள்
பாண்டித்துரை
  இவரின் பிற கவிதைகள்
 
பாண்டித்துரை குறுங்கவிதைகள்
-----------------------------------------------
01.

புன்னகைளை அனுப்பிய வண்ணமாக
இருக்கிறாள்
தன்னை யாரும் கவனிக்கக் கூடுமென
வண்ணாத்திப் பூச்சியை

எட்டிப்பிடிக்க

மேலே உயரும் கைகள்
ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள
இசை பிறக்கிறது
ஆமோதிப்பதாய்
நீளும் நாவினில்
உதிக்கும் நீர் குமிழிகள்
உடைந்து சிதறுகிறது
கண் சிமிட்டலுடன்
புதிதாய் மனிதன் கடந்து செல்கிறான்
உலகம் சுற்றும் மருண்ட விழிகளுடன்
மீண்டு வருகிறாள்
இம்முறை
கால்களும் உயர்ந்த வண்ணமாய்
வண்ணாத்திப் பூச்சியை எட்டிப்பிடிக்க


02.
என் பேச்சை
செவிமடுக்க
யாரும் விரும்புவதில்லை
நான் சின்னப்பையனாம்
வாழ்வின் எதார்த்தம் புரியாதவர்கள்
அத்தகு நிலைக்கு
நானும் வரக்கூடும்
என்முன் சென்ற
யாரும் இருக்கப்போவதில்லை
அப்பொழுது.......

03.
எப்பொழுதும் நமக்குள்
ஒளிந்து கொண்டிருக்கும் உற்சாகம்
நாம்- அவ்வளவாய் கண்டுகொள்வதில்லை
நம்மை கடந்து செல்லும்
துன்பம் மட்டும்
கட்டாயப்படுத்தலால்
கொஞ்சமாய் நம்முள் ஒட்டிக்கொண்டு
முகம்முன் மொழிகிறது
விசாரிப்புகளுக்கு ஆசைப்பட்டவனாய்
நானும்.......

04.
அம்மாவிற்கும் அப்பாவிற்குமாக
விட்டுத்தராத பழக்கவழக்கங்கள்
புன்னகைகளப் புறக்கணித்து
உனக்காக காத்திருந்தது
இருவரும் ஒருவரை விரும்பி
இடப்பக்கம் வலப்பக்கமாக
இடைவெளிவிட்டுப் பயணித்தது
ஜாலிடே மச்சான் என்று
உள்ளே வெளியே
உதட்டோர புகை
புட்டி சப்தம் ஊறுகாய் என
எல்லாமுமாய் சயனித்த பொழுதுகள்
பிரியும் தருணத்தில் கண்ணீர் இருந்தாலும்
மீண்டும் சந்திப்போவல்லவா என்று
எட்டிப்பார்த்த மிச்சப்புன்னகை
மின்னஞ்சல்
தொல்லைத் தொடர்பு என கொஞ்ச காலம்
பின் எப்போதாவது
உன் ஞாபகம் இருப்பதாய்
இறந்துபோன் என்னை நானே உயிர்ப்பித்தல்
கடந்த மாதத்தில் பாபுவைப் பார்த்தேன்
என்னை அவன் பார்த்தும் பார்க்காததுமாய்
பேருந்தை விரட்டிப்பிடித்த நிமிடங்கள் மட்டும்
இதுவரை 40 முறையாவது
மறு ஒளிபரப்பாயிருக்கும்
எல்லோருக்குள்ளும் பிளவுகள்
முகுமூடியை அணிந்த வண்ணம் கடந்து செல்கிறேன்
இன்னும் மழைத்தூறல் நின்றபாடில்லை.


-பாண்டித்துரை
நன்றி : பெப்ரவரி 08 யுகமாயினி பக்கம்: 43


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு


 



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
1998 - 2009 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்