நீ
எடுத்து வைத்த
அடிகள் எல்லாம்
என் இதயத்தில்
என்பதாலோ ....
விதிக்கும் சதிக்கும்
எனக்கு
வித்தியாசம்
தெரியாமல் போனது !!!...
நான் உருகுவது
தெரியாதது போல்
நீ
உன் பார்வையை
மாற்றிக்கொண்டதும் !!!...
என்
கண்களை காண
தயங்கி நிற்கையில்
உன் விழிகளில்
கண்ணீர் உறைந்ததும் !!!...
விதியாகிப்போனதுவோ !!!...
இன்று
என் இதயத்தில்
முகம் காண
துடிக்கிறாய் ...
முடியாது பெண்ணே ...
நேற்றைய தெளிந்த
நீரோடை அல்ல அது !!!...
உன்
கபடக்காதலை
அதில் நீயும்
கலக்கியதால் ...
காணாமல் போய்விட்டாய்
கண்ணே ...
என் மனமும்
கலங்கியதால் !!!....