தூசிகளாய் ...
----------------
நீ காதலை
உணர்ச்சிகரமாக சொல்லிய
அந்த இரவில்...
உனக்காக
நான் வடித்த கவிதை ..
உனது இதய அறையில்
எங்கோ ஒரு மூலையில்
தூசிபோல...
இனியும்
சில வருடங்கள்
அது தங்கி இருக்கலாம்
யாருமே அறியாமல் ..
பனிக்காலம்
மழைக்காலம் என்பது போல்
மறதிக்காலம்
உன் மனதை
மூடும் வரை ..
அதன் பின் ..
வேறொரு இரவு ..
வேறொரு கவிதை என
தூசி மீது தூசி படர்வது போல் ,..
இப்படித்தான்
இவ்வுலகில்
மீண்டும் மீண்டும்
காதல்களும்
கவிதைகளும்
தூசிகளாய் ....
- விஷ்ணு ...
www.vishnu-vichu.blogspot.com
www.vichu-vishnu.blogspot.com
www.enathu-ennangal.blogspot.com
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
|
|
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
|