|
|
|
|
|
|
|
|
|
|
|
உன் சம்மதம் பூக்களாலானது .. சலனச்சுமை
01.
உன் சம்மதம் பூக்களாலானது
------------------------------------
ஓராயிரம்
வண்ணத்துப்பூச்சிகளை
உன் திசையில்
பறக்கவிடுகிறேன்
மழைவரும்
போதெல்லாம்
உன்
நினைவுகளை
பெறுகிறேன்
இருந்தும்
உன் நினைவுகளை விட
மழை அழகானது
உனக்கும்
எனக்கும் இடையில்
பெரும் நதி
ஓடிக்கொண்டிருக்கிறது
நான் சாகவரம்
பெரும்வரை
காத்திரு
விரிந்துகொண்டிருக்கும்
புத்தகத்தின்
நடுவே
சொற்பமாய் வந்து
செல்கிறாய்
மீண்டும்
வாசிக்கத்
துவங்குகிறேன்
தொலைந்த
பக்கங்களிலிருந்து
02.
சலனச்சுமை
------------------
மெதுவாக
நகர்ந்துகொண்டிருக்கிறது
உனக்கும்
எனக்கும்
தனித்தனி
வாழ்க்கை
பிறப்பதும்
இறப்பதுமாய்
இருந்த
கணங்கள்
இனி
எதன்
யதார்த்தத்தில்
பிரிவோமென
சொல்லாமல்
சென்றிருந்தாலும்
பிரிவு
துவங்கிவிட்டது
உன்னோடு பேசாத
வார்த்தைகள்
உருவமாhகி
என்னை உன்னிடம்
அழைத்துக்கொண்டேயிருக்கிறது
நானோ
மௌனம்கொண்டு
தகர்க்கிறேன்
நமக்கான
வார்த்தைகளை
-அறிவுநிதி
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
|
|
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
|
|