கவிதை இதயங்களின் துடிப்பு
இதழ் :: ஆடி 14, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 496 கவிஞர்கள் , 2223 கவிதைகள்
வாசல்
கவிஞர்கள்
கவிதைகள்
விமர்சனங்கள்
நேர்காணல்கள்
கட்டுரைகள்
கவிதைகள்
கனவுத் தூதுவன்
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
என் உயிர் நீதானே.. அன்பளிப்பு
வரதப்பிரியை
ஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகல்
இளங்கோ -கவிதைக்காரன் டைரி
மரணத்தின் வாசல்.. மனசு முழுக்க
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
மழையாக பெய்திடுவோம்
ஈழநிலா, இலங்கை
நழுவுதல்.. உருண்டைச்சோறு
முத்துசாமி பழனியப்பன்
ஓற்றைக்கதவும்.. நோர்வே சில தூரம்
கவிதா. நோர்வே
சீதனம்.. வேதனை
கல்முனையான்
கனவென்ன கனவே.. நாளைய பொழுது
ப.மதியழகன்
முகமூடிகள்
அ. முகம்மது மீரான்
மண் வாசனை
வேதா. இலங்காதிலகம்
பூமியை அழிக்கும் பாதரசம்
வே .பத்மாவதி
ஓட்டை பலூன்.. சிட்டு க்குருவி
வி. பிச்சுமணி
அரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்
இல்லாத ஒன்று.. இதம் மறந்த.. சீற்றம்
ராமலக்ஷ்மி, பெங்களூர்
மானுட.. மனசுக்குள்.. ஆசை மழை
வல்வை சுஜேன்
தவம்.. பயணம்
மாவை.நா.கஜேந்திரா
மௌன அதிர்வுகள்
நவஜோதி ஜோகரட்னம்
விமர்சனங்கள்
ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
நிகழ்வுகள்
படமும் வரிகளும்
சரம்
Thanks for the pictures
வாசல்
>
கவிதைகள்
பிரசுரிக்கப்பட்ட திகதி:2010-02-06
கனவு.. கலையாய் ஒரு கதை
கவிதா. நோர்வே
இவரின் பிற கவிதைகள்
தெரிவு செய்க
- ஓற்றைக்கதவும்.. நோ..
- தீத்துண்டுக் கனவு....
- வீடு திரும்பல்.. தா..
- பருந்துகளும் என் வீ..
- தூரதேசத்திருந்து..
- ஆயுதப்போரும் அகாலமர..
- ஒரு வேண்டுதல்..
- போர்முனை இரவுகள்..
- மனிதன் என்று..
- அம்மா ..
- திருமணம்..
- ஆடுகளம்..
- அவஸ்த்தை..
- எத்தனை வருடங்கள்..
- அந்த ஒரு சொல்மட்டும..
- முடிச்சுக்கள்..
- நான், எனது மகள்..
- இழப்பு..
- மூலைகள்..
- பயணங்கள் முடியட்டும..
- கறுப்புதேசம்..
- காத்திருக்கிறேன்..
- காதலில்..
- சகலமும் நான்..
- செக்குமாடு... திரௌ..
- நிழல் நிஜம்..
- மொழி... எது கவிதை?..
- முடிவென்ன?..
கனவு.. கலையாய் ஒரு கதை சொல்கிறேன்
01.
கனவு
----------
என் கனவுகளுக்கும்
நிறமிருப்பதாய்ச் சொன்ன போது
குறுக்கும் நெடுக்குமாய்
கல்லறைகள் எழும்பின
கர்ப்பம் சுமக்க மட்டுமே
கனவுகள்... என்றாகி
பிரசவிக்க முடியாது
பிதற்றிக் கொண்டு
முக்கோடி வருடங்கள்
கடந்து வந்த சகோதரிகளுக்கு
இரத்தமும் சதையுமாய்
உங்கள் குறைமாத்ததுக்
குழந்தை போலாகாமல்
விதைத்தவர்கள் தோட்டத்திலேயே
நடக்க மறுத்தது
என் கனவுகளின் கால்கள்
நான் பிடுங்கப்பட வேண்டிய களைதான்
என்று ஆற்றாதவர்
அரிவாலோடும்
அவர்களுக்கேயான பகற்கனவோடும்...
பயத்தின் சிரத்தைக்
கொய்து எடுத்த பின்
எனது கைவிலங்குகள்
உடைக்கப்பட்டன
சிறைக் கதவுகள்
திறக்கப்பட்டன
ஒவ்வொரு விடியலிலும்
திணிக்கப்படும் கனவை
தின்று தணிக்கிறது
எனது விழி
என் கனவின் நிறங்கள்
கோர்த்தெடுத்து
வானவில்லைத் தரையிறக்கிப்
பரந்து வாழப்
பாலம் கட்ட...
இதோ
எனது முதற் கல்.
நான் இதுதான்
இப்படித்தான்
என்றால் மட்டுமே
சாத்தியமாகிறது.
என் கனவு
02.
கலையாய் ஒரு கதை சொல்கிறேன்
---------------------------------------
எங்கள் ஊரில்
ஆயிரங்காலத்து முன்னிருந்து
அழகான ஆலமரம் ஒன்றிருந்தது
தம் வீட்டு முற்றத்தில்
ரோஜாக்களை வளர்போர் பலர்
ஆலையை பழசென்று ரசிப்பதில்லை
இருந்தும் அது
விழுதுகள் விட்டு
விழுதுகள் முட்ட
ஓங்கி வளர்ந்தது.
ஆதில் இளைப்பாறுதல் சுகம்
பலருக்கு
பார்வைக்கு எட்டா கறையாண்கள் சில
மண்முட்டிய விழுதுகளை
ஆங்காங்கே அரிக்கத் தொடங்கின.
வேர்களிலும் படரத்தவித்தன.
புற்களும் பதர்களும்
ஆலையைச் சுற்றி வளர்ந்தன.
தம் வீட்டு ரோஜாக்களைத் தவிர
யாருக்கும் விழுதுகள் அழிவதில்
அக்கறையில்லை.
பலருக்கு நேரமில்லை.
சிலருக்கு ஊர்மரத்துக்கு
உரம் போடுதல் கௌரவக்குறைச்சல்.
ஓடி ஓடி கரையாண்களை
ஓட்ட நினைத்தனர்தான் சிலர்
கத்திக் கத்தி அவை
களைய நினைத்தனர்தான் பலர்.
அவர்கள்
பைத்தியம் என்று
பரிகாசிக்கப் பட்டனர்.
இருவருக்குமிடையே...
மௌனம் மையங்கொண்டது
மௌனம் பாதுகாப்பானது
அங்கே
மௌனமே உத்தமம்
மௌனமே சௌகரியம்
யார் சொன்னது மௌனம்
சம்மதமென்று?
மௌனம் ஒரு தப்பிப்பு
ஆழ்ந்த மௌனத்தில்
ஆலை சாயப்போவதை
அலறிப்போன காற்றை
உணர்ந்தும் உரைக்காத
முற்றிலும் மயான மௌனம்
நாளை
கறையாண்கள் அகற்றிய பின்
ஆலை தரும் சுகத்தை
குந்தியிருந்து சுவைக்க
வரலாம்
மௌனித்திருந்த உத்தமர்கள்.
நான்
உங்களைச் சொல்லவில்லை.
-சுரபி
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு
|
இணைவதற்கு
இவருக்கான விமர்சனம்
பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும் .. [கவிதைப்பித்தன்]
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
வாசல்
|
கவிஞர்கள்
|
கவிதைகள்
|
விமர்சனங்கள்
|
நேர்காணல்கள்
|
கட்டுரைகள்
நிகழ்வுகள்
|
படமும் வரிகளும்
|
சரம்
|
நூலகம்
|
எம்மைப்பற்றி
|
கருத்துக்கள்
|
மொழிபெயர்ப்பு கவிதைகள்
1998 - 2009 vaarppu.com - a magazine for
Tamil poems
.
powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்