ஒவ்வொரு மூர்க்கமான மோதலிலும்
மாறி மாறி
சில பூக்களையும் இலைகளையும்
இழந்துகொண்டிருந்தது
காற்றிடம் மரம்.
வாடிக்கையான சண்டை போல்
இல்லாமல்
இன்று கொஞ்சம் உக்கிரமாயிருந்தது
தள்ளாடியபடியே
நான் மரத்தினடியில் அமர்ந்தேன்
சாராய நெடி ஏகமாய் அடித்தது
குடித்துவிட்டு வந்திருந்த காற்று
உலுப்பியதில்
முன்னத்திக் கிளைகளில் ஒன்றிரண்டு
முறிய தொடங்கின
மனம் ஏற்கனவே வெகுவாய்
சோர்வுற்றிருந்தது.