ஒன்றான மழலையும் முதுமையும்
----------------------------------------
விளங்கா மொழியில் புலம்புகையில்...
தூக்கத்தில் மென்சிரிப்பை உதிர்கையில்...
இறைவனை தொழும் முகத்தில்
இறைவனை கொண்டு மிளிரும் அழகில்...
புதியதை கண்டு வியக்கும் கண்களில்...
பயத்தில் விரல் பிடித்து நடக்கையில்...
வலுவில்லா கைகள்
தொட்டு கைதுசெய்கையில்...
உறதியான பிடிவாதத்தில்...
நான் தாமதித்தால்
கவலையுறும் மனதில்...
கடுகளவு இன்பத்திலும்
அணைக்கட்டா பொக்கைவாய் சிரிப்பில்...
கண்ணீரை ஆயுதமாக்கும் கலையில்...
நான் என்றும் தாய் தான்
என் மகளை கொஞ்சும் பாட்டியையும்
மகளைப்போல எண்ணுகையில்...