மின்னியல் ஒளி பெற்று
பொன்வண்ணம் நாடிச் செல்லும்
பெண்ணொன்றுகோபம் கொண்டு
கண் வண்ணம் கரையும் மட்டும்
கலங்கிய முகத்தை துடைத்து
ஓங்கிய கோபம் ஆங்காரமாக
தடுத்த தந்தையை ஒதுக்கி
மாதவம் கொண்டு மகளைபெற்ற
மங்கை நல்லாள் மனமும் நோக
வேங்கை போல் வெளிச்சேன்றாள்
பெண்ணவள் மனம் மகிழ
பெற்றவர் செய்துவந்தார்
கண்னவள் கருதியதெல்லாம்
கடமையாய் செய்து வந்தார்
வண்ண மயில் தோகை வேண்டும்
வண்ணங்கள் கொண்ட கூந்தல்
பெண்ணிவள் தோள்கள் புரள
தன்கண்கள் இரண்டு கண்டு
கயல்கள் என்று கொண்டு
வயல் பறவை தின்று விட்டால்!
அந்த கயல்கள் காத்து நிற்க
கரும் கண்ணாடி அணிந்து கொள்வாள்
கை கொண்ட விரல்கள் கொள்ள
கலை கொண்ட மொழிகள் கற்று
கவிதையாய் வளர்ந்து நின்றாள்
பெண்கள் பேதை என்போர்
பேதை போல் ஒதுங்கி நிற்பார்
பெண்ணிவள் கண்டு விட்டாள்
கல்வியில் குறை இல்லை
கற்பதும் வெறுக்கவில்லை
கல்லூரி கசக்குது என்றாள்
பள்ளிகள் சொல்லவில்லை
படித்தோர் அறிந்தது இல்லை
ஆண் பெண் பேசிக்கொண்டால்
பிழை என்று கொள்ளச் சொல்லி
பெற்றவர் சொல்லி நின்றார்
கண்டிப்பு தேவை என்றே
அங்கு
ஆடவர் தொல்லை இல்லை
பெண்ணிடம் பேசினாலே - அவர்க்கு
படிப்பு இல்லை
கண்ணே நீ அங்கு படித்தால்
எமக்கு பயமும் இல்லை
உன் நிலை எண்ணி நாங்கள்
யோசிக்க தேவை இல்லை
கண்டிக்க குழந்தை அல்ல
கண்டிப்பாய் சொல்லி விட்டாள்
மனிதர்களை தினம் பார்த்தும்
மனதுகளை நம்பாமல்
பேசுவது குற்றம் என்றால்
பெண்ணுக்கும் ஆணுக்கும்
தனித்தனி உலகுபடைத்து
தனித் தனியே வாழ்ந்திடலாம்
வானை ஆராய
பெண் செல்லும் உலகில்
அருகு அமரும்
மனிதனிடம் பேச
தடை சொல்லும் கல்லூரி
சிறை என்று சினந்தால்
பாரதி கண்ட புதுமை பெண்