|
|
|
|
|
|
|
|
|
|
|
ஓட்டை பலூன்.. சிட்டு க்குருவி
01.
ஓட்டை பலூன்
---------------------
காக்கா கூட்டில் காக்காகுஞ்சின் அலகு
வெளியில் பசியுடன் நீட்டிகொண்டு
நீள அலகில் இரைவருமென
செவ்வாய் பிளந்து கிடக்கிறது
காற்றுபோன அடிகுழாய் ஒன்றில்
நீர்ஊற்றி நீர் வரும்
நீர் குடிக்கும் நீர் ஊற்றுகள்
நீருககாக காத்திருக்கின்றன
பாம்பை உண்ணும் பாம்பு
ராஜநாக பாம்பு குறும்படம் விரித்து
பாம்புக்காக காத்திருக்கின்றது
வியர்தது கொட்டும் உடம்பில்
ஈரக்காற்று படும் பொழுது
ஒரு சிலீர்ப்பு உண்டாகும்
அதனன்ன சுகம் தேடும்
அந்த நினைவுகள்
ஓட்டை பலூனில் காற்று அடைக்கிறது
நேரடியாய் வரும் நாளில்
அண்டத்தில் பறக்கவிடலாம் பறக்கலாம்
02.
சிட்டு க்குருவி
--------------------
சிட்டு க்குருவிகளின் கிசு கிசுத்த
காதல் பேச்சில்
தூக்கம் கலைந்த ஆதவன்
சினம் கொண்டு சிவந்தான்
சுட்டெரிக்க பின் தொடர
மரங்களில் மறைந்தன குருவிகள்
கோபத்தில் தவறுதலாக கழுகுகளின்
கழுத்தை கறுக்கினான்
குருவிகள் கொரில்லா போர் முறையில்
ஆதவனிடம் விளையாட்டு காட்டின
நடுவானம் வந்து
மனிதனை வெறுப்பேற்றினான்
குடைகொண்டு தன்னாட்சி செய்த
மனிதனின் அறிவு வியந்து
சிட்டுக் குருவி மீதான கோபம் சொன்னான்
ஆதவனுக்கு உதவ
மனிதன் கைபேசி கோபரங்களை நட்டு
சிட்டு குருவிகளின் சிறகுகளை
காட்டுக்குள்ளே முடக்கினான்
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
|
|
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
|
|