Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: ஆவணி 18, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 498 கவிஞர்கள் , 2241 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointபதில்களற்ற மடலாடல்
அவனி அரவிந்தன்
red pointபாசமான பாட்டிக்கு...
வே .பத்மாவதி
red pointதமிழுக்கு அமுதென்று பேர்...!
வை. அண்ணாஸாமி
red pointஎன்னுள்ளே
சுடர்விழி
red pointதூயவள்
வல்வை சுஜேன்
red pointபிச்சைக்காரி.. அவ‌ளின் பிர‌ம்ம‌ன்
ராம்ப்ரசாத், சென்னை
red pointஅழும்வரை சிரிப்பேன்.. காதல் ஏக்கம்
கிரிகாசன்
red pointஇறந்து போவது மேலாகும்
ஈழநிலா, இலங்கை
red pointரமளானே வருகவே...!!!
கவியன்பன் கலாம்
red pointஅரங்கேற்றம்
கணபதி
red pointசில நேரங்களில் சில மனிதர்கள்
லதாமகன்
red pointஎல்லாக கண்களையும் இழந்த
தீபச்செல்வன்
red pointவயது வந்தாலென்ன
நவஜோதி ஜோகரட்னம்
red pointபணம்
வேதா. இலங்காதிலகம்
red pointசும்மா கிடைத்ததல்ல.. பிணமென்றே
வித்யாசாகர்
red pointகாணவில்லை
வேல் கண்ணன்
red pointஅடையாளம்
அபிமன்யு ராஜராஜன்
red pointதேர்தல்!!
இமாம்.கவுஸ் மொய்தீன்
விமர்சனங்கள்
red pointஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
red pointபெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
red pointகாணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2010-07-14 
picture for poem
மழையாக பெய்திடுவோம்
ஈழநிலா, இலங்கை
  இவரின் பிற கவிதைகள்
 
மழையாக பெய்திடுவோம்..
------------------------------------

இலங்கையர்கள் நாங்களெல்லாம் சகோதரர்கள் என்றிடுவோம்!
இசையோடு நாதம்போல் இணைந்தேநாம் நின்றிடுவோம்!
கலங்குவதால் பயனில்லை கவலைகளை கொன்றிடுவோம்!
விலங்குகளாய் விளங்காமல் விலங்குகளை வென்றிடுவோம்..!

உலகத்தின் ஐக்கியத்தை ஒன்றாகி நெய்திடுவோம்..!
உலர்ந்துநிற்கும் மனங்களுக்குள் மழையாக பெய்திடுவோம்..!
கலகத்தை காதலிக்கும்; உணர்வுகளை கொய்திடுவோம்..!
களைவளர்ந்த பூமியிலே கலைவளர செய்திடுவோம்..!

நேசமென்னும் தென்றல்வர நெஞ்சத்தை திறந்திடுவோம்!
நேர்வழியில் பூப்பறித்து பாரினிலே சிறந்திடுவோம்!
சிரமம்தான் என்செய்ய கடந்தவற்றை மறந்திடுவோம்!
சிக்கல்களை விட்டுவிட்டு சிறகடித்து பறந்திடுவோம்!

சாதிமதம் பார்க்கின்ற சறுகுகளை உதைத்திடுவோம்!
சாத்தானின் சரித்திரத்தை குழிதோண்டி புதைத்திடுவோம்!
சாந்தியினை ஊர்கூடி உலகெங்கும் விதைத்திடுவோம்!
சண்டையிட்டு சரிந்தவர்கள் உளம்;திறந்து கதைத்திடுவோம்..!

அடிமைக்கும் மிடிமைக்கும் கொடுமைக்கும் கொள்ளிவைப்போம்!-எம்மை
அழவைக்கும் விழவைக்கும் தவறுகளை தள்ளிவைப்போம்!
புரிந்துணர்வு கோலமிட புன்னகையால் புள்ளிவைப்போம்-நாம்
புரிந்துகொண்ட சேதிகளை பூக்களுக்கும் சொல்லிவைப்போம்..!


எம்நாடு முன்னேற எம்மவர்கள் சேரவேண்டும்!
நம்நாடு இலங்கையென நம்மவர்கள் கூறவேண்டும்!
கண்ணோட வலிதந்த காயங்கள் ஆறவேண்டும்!
மண்ணோடு போய்விடமுன் மனதெல்லாம் மாறவேண்டும்!

எம்துயரம் இன்றோடு வீழவேண்டும்.
எமக்குள்ளே நல்லுறவு சூழவேண்டும்-நாம்
ஒருதோப்பு குயிலாக வாழவேண்டும்-எம்
ஒற்றுமையால் எம்தேசம் வாழவேண்டும்.

மண்ணாகும் வாழ்வினிலே மனமுவந்து விட்டுக்கொடு!
மாற்றானின் முயற்சிக்கும் துவேசமின்றி முட்டுக்கொடு!
இல்லாத மனிதருக்கு இருப்பதனை பெற்றுக்கொடு-நாம்
இலங்கையராய் வாழ்வதற்குன் குழந்தைக்கும் கற்றுக்கொடு..!

மடமைகளை துரத்திவிட்டு மனங்களினை வாசிப்போம்!
மறைந்திருக்கும் கலைஞர்களை மனமுவந்து ஆசிப்போம்!
இனமதங்கள் நாம்கடந்து தாய்நாட்டை நேசிப்போம்.!
இருக்குவரை இறக்கும்வரை தமிழ்மொழியை சுவாசிப்போம்...!!


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு


 



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
1998 - 2009 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்