Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: வைகாசி 24, 2013 [ வார இதழ் ]
இன்றுவரை :: 636 கவிஞர்கள் , 2725 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointமழை சுட்ட.. ரத்தக் கடத்தி..படுகொலை
கோபால் நாதன்
red pointகண்ணாமூச்சி ஆடுகிறாள்
இன்பசுதேந்திரன்
red pointபயணியே!
வேந்தன்
red pointகசக்கும் நினைவுகள்
ஹபீலா ஜலீல்
red pointநிலாவும்..காதல் யுத்தம்..லேட்டஸ் லவ்
இரா சனத், கம்பளை
red pointமாமிஷ தின்னி.. நாய்கள்.. வேக்கையன்
ஜே.பிரோஸ்கான்
red pointமரணம்
எம்ஸீயே.பரீத்
red pointமரணமெனும் விடியல்
ரொசனா ஜேவ்ரி
red pointமறந்தது எப்படி!..வறுமை.. வெண்ணிலா
வேதா. இலங்காதிலகம்
red pointகழிவுநீரில்.. சிட்டுக்குருவி..நாம் அலை
வித்யாசாகர்
red pointஅவசரத் தீர்மானம்.. மிரள.. பிரளயம்
இன்பசுதேந்திரன்
red pointநானிலத்தை அழகூட்டும் வனப்பேச்சி
க.உதயகுமார்
red pointபரம்பரை நோய்
நீச்சல்காரன்
red pointகாலம் அவளை.. மழையில் நனையாமல்
வேலணையூர்-தாஸ்.
red pointவீட்டில் எண்ணெ.. முற்றுப்புள்ளி..ஒரு கொடி
வித்யாசாகர்
red pointசொல்லித் தீராத சங்கிலி
எம்.ரிஷான் ஷெரீப்
red pointபத்மினி சாகுமளவிற்கு உன்னை
தக்ஷிலா ஸ்வர்ணமாலி
red pointவானம் உமிழ்கிறது..காதல் கொண்ட
கிருஷ்ணா, யாழ்ப்பாணம்
விமர்சனங்கள்
red pointஇதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
red pointஇந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...
red pointகவிதைத் தொகுதியில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள், காதல், அழகியல் போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2012-03-09 
picture for poem
எந்திரசாலிகள்
அருணன்
  இவரின் பிற கவிதைகள்
 
எந்திரசாலிகள்
---------------------

எல்லாருக்கும் வாய்க்கிறது உறக்கம்
கடிகாரத்தைப் போன்றவர்கள்
என்ன செய்ய?
சுற்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.

வெயிலின் நிழலில்
இளைப்பாறிக் கொள்ளவும்
மழையில் குளித்துக் கொள்ளவும்
அவர்களுக்கு நேரம் கிடைத்து விடுகிறது

பசியைத் தின்று
வியர்வை அருந்தி
காதுகளின் வாயிலாக
ஏப்பம் விட்டுக் கொள்கிறார்கள்.

புகையில் மூச்சும்
திராவகத்தில் அமுதும்
அருந்தக் கற்றவர்கள்

மனிதர்களை விடவும்
கருவிகளை மட்டுமே
கடவுள்களுக்கு இணையாய்
நம்புகிறவர்கள் நல்லவர்கள்

உயிர்கள் எல்லாம்
பதுமைகளாய் மாற
பதுமைகளை உயிர்ப்பாய்
இயங்கச் செய்யும்
எந்திரசாலிகள்

கூண்டுக்குள் அகப்பட்டவர்கள்
கூடுகட்டத் தெரியாதவர்கள்
கட்டுக் கட்டாய்ப் பணத்தில்
கரையானாய் வசிப்பவர்கள்

பொழுதுகளைக் கடத்தி
போகத்தில் ஆழ்ந்து
யோகமெல்லாம் கனவேபோல
தூக்கமின்றிக் கிடப்பவர்கள்

மொழியோ உணர்வோ
மனிதருக்குள்ள மற்றவைகளோ
சற்றும் இல்லாத
விசித்திரப் பிராணிகள்

நாளைய உலகை
இவரே ஆள்வார்
யாரோ சொல்கிறார்
உண்மையாயும் இருக்கும்......


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு


 



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
© 1998 - 2013 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்