ஆரம்பத்தில்
இப்படித்தான் ஆரம்பித்தது
என்னவளே
கொஞ்சிக் கொஞ்சி என
இரண்டுவரி பேசி
பின்னொரு நாளில்
மூச்சை இழுத்துப் பிடித்து
முழுபப்பமாய்.
முதலியார் பற்றி ஒரு நாள்
முப்பாத்தம்மாள் பற்றி ஒரு நாள்
திடிரென ஒரு நாள்
வெட்டு குத்து இரத்தம் என
வாடை அடித்தது
நிறம் மாறும் பச்சோந்தியாய்
நித்தமும் மாறியது
சில நாட்கள் வேதாந்தம்
ஆன்மிகம் அரசியல் என
என்னொன்னவோ பேசி
கடைசி வரை பேசவில்லை
என்னைப்பற்றி!