பேருந்து பயணத்தில்
பெயர் தெரியா முகங்களை
கண்களின் பிம்பங்களில்
ஒப்பிட்டு
தளர் நடையில்
மறதியாய் செல்லும் போது
எங்கிருந்தோ கேட்கும் குரல்
திரும்பிப் பார்த்தால்
யாரோ! யாருடனோ?
சொல்வதற்கு ஒன்றுமில்லாமல்
தொலைபேசியில்
மௌனமாய்
தொலைந்த வார்த்தைகளை
தேடிக் கொண்டு
ஞாபகச் சிந்தனையால்
கண்மூடி துஞ்சும் போது
காரணமின்றி கடந்து செல்லும்
காட்சிப் பிம்பங்கள்
தலைவியாய்...