கற்றத்தருகிறது ஞாபகங்களை
பிரியங்களும்
ஸ்பரிசங்களும் துளிர்க்கிறது
வலி மறந்து
தள்ளி நின்றபோதும்
எதிர் பிம்பமாய்
இடைவெளியும் தொடார்புடையதாகவே
கவிதை: அறிவுநிதி
பூ பூக்கிறது..
ஒரு பூ பூந்தோட்டமாகிறது
எங்கிருந்தோ வந்த வண்ணத்துபூச்சிகள்
யாரும் அறியாமலே வட்டமடிக்கின்றன
பூ பறிக்கும் ஆவல் கண்களில் நிகழ்கிறது
தோட்டத்தில் புரலும் காற்று
பூவின் நறுமணத்தைக் கொண்டு
அத்திசை கௌரவிக்கப்படுகிறது
சுவாசம் பூவானது
உள்ளிளுக்கும் மூச்சு வசந்தமாக்கப்பட்டு
மனதின் ஆழத்தில் வார்த்தைகள்
தேங்கி (பெறுமூச்சுடன்)
மௌனிக்கிறது
சில மலர்கள் உதிர்கின்றன
காலம் கடந்தும் கனவுகள்
சிதிலமடைகின்றன..
மரணத்தை யார் நிறுவியதோ?