ஊடுருவும் பார்வை
எனை பார்ப்பதாக
சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டு
ஊர்ஜிதபடுத்துகிறேன்
புன்னகைகள் இடம் மாறியது
ஜாடைப் பேச்சின்
மீண்டுவந்த நாட்களில்
சரிசமமாய் எங்களின் பயணம்
எங்கோ ஆரம்பித்து
எங்கெங்கோ முடியும்
இரவல்பேசி வழி
(நல்) இரவுகளை விழுங்கிட
விழித்துக்கொள்ளும் நாட்களில்
விகல்பப் பார்வையாய்
புறம் தள்ளி செல்கிறது
கேட்டுக்கொண்டிருக்கும்
புலம்பல் ஒலியை..