மோகிக்கும் உருவத்திடம்
யாசகனாய் தவமிருந்து
செய்வதறியாது திகைக்கும் போது
சரி போ என
சில்லறையை சிதறவிட்டு
மேல் எழும்பும் அலைகளால்
உள் இழுக்கப்பட்டு
எழ எத்தனிக்கும் போதெல்லாம்
எழில் சார்ந்த பெருமூச்சின்
திராவகப் பார்வையில்
ஏரிக்கப்பட்டு
எழுகின்ற மென்சோகம்
சாம்பலாய் கலக்கிறது
காற்றில்.!