இன்னும் வேண்டுமா ரத்தம்
----------------------------------
ரத்தவேட்கையில் அலையும்
ராஜபோக்கிரியே
ரத்தத்தில் எது
சுவைரத்தம் எனக்கேட்டால்
துல்லிதமாய்ச்சொல்வான்
கற்பினியின்
கழுத்து ரத்தமா?
கோலூன்றும் கிழவனின்
கால் ரத்தமா?
பள்ளிமுடிந்து
துள்ளிவரும்
மாணவ ரத்தமா?
கடைத்தெருவிலிருந்து திரும்பும்
கன்னிப்பெண் ரத்தமா?
தண்ணீருக்கு அலைந்து
குடம்நீர் கொண்டுவரும் வேளையில் குடித்த
குடும்பப் பெண்ணின் ரத்தமா?
எந்த ரத்தம்
எது சுவை என
நாவைச்சொட்டி
நாராசமாய்சொல்வான்
புதுங்கு குழிக்கு
ஒதிங்கி ஓடும்
பாலர்கள் ரத்தமா?
கைக்குழந்தையை
காப்பாற்ற ஓடிய
அன்னையர்கள் ரத்தமா?
காட்டுக்கு சென்று
விறகு கொண்டுவரும்
வழியில் சுடப்பட்ட
தந்தையர் ரத்தமா?
உரிமைப்போரில்
உயிர்நீத்த
உன்னதவிரனின்
விதவையின்
ஒட்டிய வயிற்று ரத்தமா?
நெஞ்சை நிமிர்த்தி
நேருக்கு நேர் போர்செய்த
விடுதலை வீரனின்
வியர்வை ரத்தமா?
கருவறையில்
நெளியும்
கைகால் முளைக்காத
அரைகுறை குழந்தையின்
ஆறாத ரத்தமா?
எது சுவை ரத்தம்
ஏனிந்த குழப்பம்?
இவர்கள்
ரத்தத்தைவிட
மிகுந்த சுவையானது
புதிதாய் வயதுக்குவந்த
உன் மகளின் சுடுரத்தம்!
உன்னை ஈன்றபோது
உன் நாவில் விழுந்த
தாயின் யோனி ரத்தம்!
புறமுதுகிட்டு
போரில் மாண்டு
நாய்கள் நக்கிய
உன் படையின்
ரத்தம்!
நரம்பருந்து
நாதொங்கி
காலிழந்த
உன் கூலிப்படையின் ரத்தம்.
சுவைத்துப்பார்
சொல்வாய் நீயே!
-கோ.புண்ணியவான்.
ko.punniavan@gmail.com
